பொதுவாக நாம் பசித்தால் சாப்பிடும் ஒரு விஷயமாக வேர்க்கடலை மாறியிருக்கிறது. இந்நிலையில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஆக இது இருக்கிறது. இந்நிலையில் இதை அதிகமாக எடுத்துகொண்டால் கல்லிரல் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சில விஷயங்கள் வேர்க்கடலையை கெட்டுப்போகச் செய்கிறது. அஃப்ளாடாக்சின் என்பது அதிகம் வெளிபட்டால் அது கல்லிரலை பாதிக்கும். மேலும் இது கல்லிரல் புற்று நோய் ஏற்படவும் காரணமாக உள்ளது. இந்நிலையில் நாம் வேர்கடலையை சரியான அளவில் சாப்பிட வேண்டும். மேலும் இந்த அஃப்ளாடாக்சின் வெளிபாட்டால் பாதிக்காதவாறு இருக்க வேண்டும்.
வேர்கடலையில் புரத சத்து, நார்சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இந்நிலையில் இதில் கொஞ்சம் அதிக காலோரிகள் இருந்தாலு, இது உடல் எடை குறைய உதவும். குறிப்பாக புரத சத்து, நார்சத்து, இருப்பதால் இது நாம் அதிக சாப்பிட்டதுபோல ஒரு உணர்வை தரும்.
இதில் அமொனோ ஆசிட், வைட்டமின் இ, ரிபோபிளாவின், பி9 , ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் பினாஸ் உள்ளது. இதில் நார்சத்து, மோனோ மற்றும் பாலி அன்சச்சுரேடட் பாட்டி ஆசிட், ஒமேகா 3 பேட்டி ஆசிட், மினரல்ஸ், அமினோ ஆசிட் உள்ளது. இந்நிலையில் இந்த சத்துக்கள் நமது குடலை பாதுகாக்கும்.
எல்லா நேரங்களும் இந்த அஃப்ளாடாக்சின் வேர்கடலையை பாதிக்கவில்லை. இதை நாம் சேமித்து வைக்கும்போது இது நிகழலாம். நாம் வேர்கடலையை மைக்ரோவேவ் அவனில் வறுத்தால் அல்லது அவித்தாலோ அதன் அஃப்ளாடாக்சின் வெளிப்பாட்டை நாம் 95 % குறைக்க முடியும் என்று கூறுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் – லக்னோ கூறுகையில் 21% இந்திய வேர்கடலையில் இந்த அஃப்ளாடாக்சின் இருப்பதால் அதை நாம் சாப்பிடக்கூடாது.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“