வெறும் 15 நிமிஷம் போதும்… நெய் மணக்கும் கேரட் அல்வா: இப்படி செய்யுங்க

நெய், கேரட், முந்திரி இருந்தாலே போதும் நாம் இந்த கேரட் அல்வாவை செய்ய முடியும். இனிப்பு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்று இது.

நெய், கேரட், முந்திரி இருந்தாலே போதும் நாம் இந்த கேரட் அல்வாவை செய்ய முடியும். இனிப்பு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்று இது.

author-image
WebDesk
New Update
sadfva

நெய், கேரட், முந்திரி இருந்தாலே போதும் நாம் இந்த கேரட் அல்வாவை செய்ய முடியும். இனிப்பு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்று இது.

Advertisment

தேவையான பொருட்கள்

அரை கிலோ கேரட்

4 ஸ்பூன் நெய்

Advertisment
Advertisements

10 முந்திரி

8 திராட்சைகள்

1 கப் பால்

அரை கப் சர்க்கரை

செய்முறை: கேரட்டை நன்றாக கழுவ வேண்டும். அதை துருவி எடுத்துகொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து, அதில் முந்திரி, திராட்சைகளை சேர்த்து வறுக்க வேண்டும். நிறம் மாறியதும் அதை தனியாக எடுத்து வைத்துகொள்ளுங்கள்.  தொடர்ந்து நெய்யில்  துருவிய கேரட்டை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து அதில் பால் சேர்த்து, நன்றாக வேக வைத்துகொள்ளவும். சிறிது நேரம் கழித்து சர்க்கரை சேர்த்து கிளரவும். இதை தொடர்ந்து கிளர வேண்டும். நன்றாக இலகிய பதத்திற்கு வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு அதில் வறுத்த முந்திரி, திராட்சைகளை சேர்த்து கொள்ளுங்கள். சூப்பரான கேரட் அல்வா ரெடி.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: