எலுமிச்சை சாதம், புளியோதரை என்று போர் அடிக்கும் கலவை சாதத்திலிருந்து விடுதலை கிடைக்கும். இப்படி ஒரு முறை கேரட் சாதம் செய்து பாருங்க. சுவை நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
அவித்த சாதம் 1 ½ கப் சாதம்
4 ஸ்பூன் எண்ணெய்
1 ஸ்பூன் சீரகம்
1 ஸ்பூன் கடுகு
4 வத்தல்
3 பச்சை மிளகாய்
அரை வெங்காயம்
அரை ஸ்பூன் இஞ்சி- பூண்டு இடித்தது.
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி,
1 கப் துருவிய கேரட்
உப்பு தேவையான அளவு
கருவெப்பிலை சிறிதளவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, சீரகம், வத்தல், கருவேப்பில்லை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து இஞ்சி- பூண்டு இடித்தது சேர்க்கவும். தொடர்ந்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். இது நன்றாக வதங்கியதும், துருவிய கேரட் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து மஞ்சள் பொடி சேர்த்து, உப்பையும் சேர்த்து கிளர வேண்டும். அதில் அவித்த சாதத்தை கொட்டவும். இதை நன்றாக கிளர வேண்டும். சுவையான கேரட் சாதம் ரெடி.