ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலின் மூலம் பிரபலமானவர் சைத்ரா ரெட்டி.
’கல்யாணம் முதல் காதல் வரை’, ‘சுப்ரதா பரிணயம்’ என தமிழ், தெலுங்கு சீரியல்களில் ஏற்கெனவே அறிமுகமாகி இருந்தாலும் சைத்ராவை, தமிழ் ரசிகர்களிடம் பிரபலமாக்கியது ‘கயல்’ சீரியல் தான்.
அஜித்தின் ‘வலிமை’ படத்திலும் நடித்திருக்கிறார்.
இதுதவிர சைத்ரா அவரது குடும்பம் நடத்தும் பியூட்டி பார்லர் தொழிலில் ஒரு அங்கமாக உள்ளார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.
இந்த குடும்பத்திற்கு சென்னை முழுவதும் பார்லரின் பல கிளைகள் உள்ளன.
தற்போது சைத்ரா ரெட்டி பெங்களூரில், நிலவர்சி எனும் பெயரில் ஒரு புது துணி கடையை திறக்க இருக்கிறார். வரும் ஆகஸ்ட் 8ம் தேதி இதன் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.
அதுதொடர்பான ஒரு வீடியோவை சைத்ரா தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“