இன்றைய உலகில் போன் இன்றியமையாத பொருளாகி உள்ளது. எல்லா நேரமும், எல்லா இடத்திலும் மொபைல் போன் பயன்பாடு உள்ளது. இந்நிலையில், தூங்கி எழுந்தவுடன் முதலில் போன் பார்க்கும் பழக்கமும் உருவாகி உள்ளது.
இது பாதிப்பில்லாததாகத் தோன்றலாம், ஆனால் ஜலந்தரில் உள்ள மன்ஜீத் சைனி மருத்துவமனையின் MD மனநல மருத்துவர், நிபுணர் டாக்டர் ஷுப்கர்மன் சிங் சைனி இந்தப் பழக்கம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.
இது NoMoPhobia (No Mobile Phobia) எனப்படும் நிலை என்று கூறுகிறார். அதாவது, மொபைல் ஃபோன் பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்ற நிலை ஆகும். இது உடல், மன ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்கிறார்.
1. தூக்கமின்மை
ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளிவரும் ப்ளூ லைட் உமிழ்வு, தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் மெலடோனின் என்ற ஹார்மோனின் உடலின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுத்தும்.
எழுந்தவுடன் உடனடியாக நீல ஒளியில் உங்களை வெளிப்படுத்துவது உங்கள் சர்க்காடியன் ரிதத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். இது நாள் முழுவதும் சோர்வுக்கு வழிவகுக்கும் மற்றும் அடுத்த இரவில் தூங்குவதை கடினமாக்குகிறது.
2. மன அழுத்தம்
மொபைலில் சமூக வலைதள நோட்டிவிக்கேஷனை பார்த்து உங்கள் நாளைத் தொடங்குவது அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கலாம். இந்த மன அழுத்தம் கார்டிசோல் அளவுகள் மற்றும் அதிக இதயத் துடிப்பு, மனநிலை மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
ஆங்கிலத்தில் படிக்க: If you check your phone the first thing after waking up, here are five ways it is harming the body
3. கவனச் சிதறல் மற்றும் உற்பத்தி பாதிப்பு
காலையில் முதலில் உங்கள் மொபைலைச் பார்ப்பது தியானம், உடற்பயிற்சி அல்லது ஆரோக்கியமான காலை வேலைகளை மறக்கடிக்க செய்யும். அதிக உற்பத்தி மற்றும் அர்த்தமுள்ள செயல்களில் இருந்து உங்களைத் திசைதிருப்பும். இந்த பழக்கம் நாள் முழுவதும் உங்கள் கவனத்தைத் தடுக்கலாம், இது கல்வி மற்றும் தொழில்முறை சூழல்களில் உற்பத்தித்திறன் குறைவதற்கும் செயல்திறன் குறைவதற்கும் வழிவகுக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“