செப் தாமு செய்வது போல் தேங்காய் சாதத்தை நீங்களும் செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
அவித்த சாதம்- 2 கப்
துருவிய தேங்காய்- அரை கப்
கடுகு- 1 ஸ்பூன்
உளுந்து பருப்பு- அரை ஸ்பூன்
கடலைப் பருப்பு- அரை ஸ்பூன்
சீரகம்- 1ஸ்பூன்
வரமிளகாய்- 3
கறிவேப்பிலை- 2 கொத்து
பெங்காயம்- கால் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- 4 ஸ்பூன்
உப்பு
செய்முறை
அவித்த சாதம் இருந்தால், நேடியாகவே ரெசிபிக்கு சென்றுவிடலாம். நீங்கள் புதிதாக சாதம் வைக்க வேண்டு என்று தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து சாதம் வைத்து கொள்ளுங்கள். இது மேலும் தேங்காய் சாதத்தை சுவையாக்கும். இப்போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிப்புக்கான பொருட்களை போட்டு வறுக்க வேண்டும். வடித்த சாதத்தை சேர்த்து கிளரவும். தொடர்து தனியாக வறுத்த தேங்காய் சேர்த்துகொள்ளவும். சில நிமிடங்கள் வரை கிளரவும். தேங்காய் சாதம் ரெடி.