கடலைப் பருப்பை 3 மணி நேரம் ஊறவைக்கவும், அதை மிக்சியில் போட்டு அதனுடன் சோம்பு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
அடுப்பில் மண்சட்டி வைத்துஒரு குழிக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பட்டை, இலவங்கம், பிரிஞ்சி இலை, ஒரு ஏலக்காய் சேர்க்கவும். அதில் நீளமாக நறுக்கிய வெங்காயம், சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நறுக்கி வைத்த தக்காளிப் பழத்தை பிழிந்து சேர்க்கவும்.
பிறகு கீறிய பச்சை மிளகாய், தயிர் சேர்த்து நன்கு வதக்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள்,சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும்.
தேங்காய், முந்திரி பருப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த அரவையை கிரேவியில் சேர்க்கவும். நீங்கள் வதக்கும் போது நிறம் மாறும். இப்போது தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
இப்போது அரைத்த வைத்த கடலை பருப்பில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பிசைந்து உருண்டைகளாக பிடிக்கவும்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் இந்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும். இது 90% குக் ஆனால் போதும். இந்த பொரித்த உருண்டைகளை அப்படியே எடுத்து, கொதித்துக் கொண்டிருக்கும் கிரேவியில் சேர்க்கவும்.
சுவையான பக்கோடா குருமா ரெடி. கிரேவியில் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டால் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.
இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட கலக்கலாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news