ஒரு முறை செப் தாமு செய்வது போல் நெய் அப்பம் நீங்களும் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி 2 கப்
வெல்லம் 2 கப்
அரை கப் தண்ணிர்
2 வாழைப்பழம்
1 ஸ்பூன் கருப்பு எள்ளு
4 ஏலாக்காய்
3 ஸ்பூன் துருவிய தேங்காய்
கால் கப் நெய்
1 சிட்டிகை உப்பு
செய்முறை : ஒரு பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். இட்லி அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். தொடர்ந்து இட்லி அரிசியை, வெல்லப் பாகு சேர்த்து அரைத்துகொள்ளவும். அரைக்கும் போது நன்றாக பழுத்த வாழைப்பழத்தை சேர்த்து அரைக்கவும். நெய்யில் தேங்காய் துருவலை சேர்த்து வறுக்க வேண்டும். இந்த மாவை நாம் 6 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். தொடர்ந்து இந்த மாவில் எள்ளு, ஏலக்காய், நெய்யில் வறுத்த தேங்காய், 1 ஸ்பூன் நெய், உப்பு சேர்த்து கிளரவும். பணியார சட்டியில் நெய் சேர்த்து அப்பம் சுட்டு எடுக்கவும்.