செப் தாமுவின் அசத்தல் ரெசிபி: மொறு மொறு பன்னீர் ப்ரை

செப் தாமு சொல்வது போல் ஒரு முறை பன்னீர் ப்ரை, நீங்களும் வீட்டில் செய்து பாருங்க.

செப் தாமு சொல்வது போல் ஒரு முறை பன்னீர் ப்ரை, நீங்களும் வீட்டில் செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

செப் தாமு சொல்வது போல் ஒரு முறை பன்னீர் ப்ரை, நீங்களும் வீட்டில் செய்து பாருங்க.

தேவையான பொருட்கள் 

பன்னீர் – 200 கிராம்

குழம்பு மசாலா தூள் (கடைகளில் கிடைக்கும்) – ஒன்றரை டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்

கார்ன்ஃ ப்ளார் – 1 டீஸ்பூன்

அரிசிமாவு -அரை டீஸ்பூன்

உப்பு  – கால் டீஸ்பூன்

எலுமிச்சம்பழச் சாறு – அரை டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை : 

Advertisment

பன்னீரை சதுர வடிவில் நறுக்கி தனியே வைக்கவும். ஒரு பாத்திரம் எடுத்து அதில் மசாலா தூள், இஞ்சி, பூண்டு விழுது, கார்ன்ஃப்ளார் மாவு, அரிசி மாவு, எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சிறிதளவு சேர்த்து பிசையவும். குழம்பு மசாலா தூளில் உப்பு இருக்கும் என்பதால் சிறிதளவு சேர்த்தால் போதும். 

பஜ்ஜி மாவை விடக் கெட்டியான பதத்தில் பிசைய வேண்டும். பன்னீரை இந்தக் கலவையில் போட்டு, உடைந்துவிடாமல் பிரட்டவும். இப்போது அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலாவில் பிரட்டு எடுத்த பன்னீரை போட்டு பொரித்தெடுக்கவும்.  எண்ணெயை பொரிக்கும் பதத்திற்கு காய வைத்துப் போடவும். இல்லையென்றால் மசாலா பிரிந்து வந்து விடும்.  குழம்பு மசாலாவுக்குப் பதிலாக ‘சிக்கன் 65’ மசாலா கூட சேர்த்துக் கொள்ளலாம். எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பன்னீர் ப்ரை ரெடி. 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: