ஒரு முறை கடலை பருப்பு பாயாசம், செப் தாமு சொல்வது போல் செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 கப் கடலை பருப்பு
1 கப் வெல்லம்
4 ஸ்பூன் தேங்காய் துருவல்
2 ஸ்பூன் நெய்
10 முந்திரி
தேங்காய் பால் அரை கப்
செய்முறை : கடலை பருப்பை நன்றாக கழுவ வேண்டும். தொடர்ந்து அதை வறுக்கவும். கருகாமல் பார்த்து கொள்ளவும். தொடர்ந்து இதை தண்ணீர் சேர்த்து 5 விசில் விட்டு வேக வைக்கவும். தொடர்ந்து இதில் 3 ஸ்பூன் பருப்பை மட்டும் எடுத்து வைத்துகொள்ள வேண்டும். மற்ற பருப்பை மிக்ஸியில் அரைத்துகொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்க்கவும். தண்ணீர் சேர்த்து கொள்ளவும். வெல்லம் கரைந்ததும், அரைத்த பருப்பை சேர்க்கவும். தொடர்ந்து எடுத்து வைத்த அரைக்காத பருப்பை சேர்க்கவும். நன்றாக கிளரவும். தொடர்ந்து இதை வேகவிடவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் முந்திரி, தேங்காய் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து இதை பாயசத்தில் கொட்டவும். 10 நிமிடங்கள் கழித்து தேங்காய் பால் உற்றவும். 2 நிமிடங்களில் அடுப்பை அணைக்கவும்.