Advertisment

வெள்ளத்தில் மூழ்காத நவீன வீடு- இனி இது தான் எதிர்காலமா?

சென்னை போன்ற முக்கிய நகரப்பகுதிகளில் கனமழையால் வெள்ளபாதிப்பு அடிக்கடி ஏற்படும் நிலையில், நீர் மேலாண்மைக்கும், இயற்கைக்கும் முக்கியத்துவம் கொடுத்து கட்டப்படும் Humanscapes வீடுகள் குறித்து விவரிக்கின்றனர் நவீன கட்டட கலைஞர்கள்.

author-image
WebDesk
New Update
Modern home

Modern Recycle Homes

நமது நகரங்கள் எப்படி வளர்கிறது என்பதை கவனிக்கிறீர்களா?

Advertisment

நீடித்த தன்மை கொண்ட கட்டிடங்கள் கட்ட நாம் என்ன செய்ய வேண்டும்?  முதன்முதலாக இயற்கையான நிலப் பகுதியின் தன்மை கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நில அமைப்புக்கு தக்கவாறு எப்படி கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்று தெரிந்துகொள்ள எந்த பருவ மண்டலத்தில் கட்டிடங்கள் கட்டப் போகிறோம் என்ற தெளிவு இருக்க வேண்டும்.

உதாரணமாக Humanscapes அதிக வெப்பமும், ஈரப்பதமும் கொண்ட வெப்ப- ஈரப்பத மண்டலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த இரண்டும் சேர்ந்திருந்தால் அங்கு வாழ்பவர்களுக்கு பிற பகுதியில் வசிப்பர்களைக் காட்டிலும் வியர்வை அதிகமாக வெளியேறும்.

இது ஃபேன் அல்லது ஃபிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களை நேரடியாகவும், மின்சாரத்தை மறைமுகமாகவும் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளும்.

கட்டிட கலைஞரும், நகர திட்டமிடலாருமான சுஹாசினி புதுச்சேரியில் உள்ள ஆரோவில் நகர வாழ்விட திட்டத்தை மேற்கொள்கிறார்.

இதுகுறித்து DW Tamil செய்தி நிறுவனத்திடம் அவர் கூறுகையில், ’நாம இளைய தலைமுறையினர் குடியிருக்கக் கூடிய முற்றிலும் மாறுபட்ட திட்டத்தோட, வித்தியாசமான தொழில்நுட்பத்தோட கட்டிடத்தை கட்டுனா அது உண்மையிலே இளைய தலைமுறையினரை ஈர்க்கும்.

இந்தியாவில் நீடித்த நிலைத்தன்மை கொண்ட கட்டிடத்தை எப்படி கட்டுறதுனு அடிப்படையில உருவானதுதான் Humanscapes.

Modern home Suhasini

இந்த மண்ணுல விழுற ஒரு சொட்டு நீர் எங்க போகுது? எங்க முடியுது? புவியியல் ரீதியா காலம்காலமா நிலத்தை உருவாக்குறது நீர்தான். அதே தொந்தரவு செஞ்சா என்ன ஆகும்? அதுதான் பருவமழை காலங்கள்ல சென்னையில நடக்குது.

ஒருசில வீடுகளுக்குள் வெள்ள போகுற அதே சமயத்துல இன்னொரு சில வீடுகள்ல குடிக்க தண்ணீர் இருக்காது. இந்தமாதிரி நகரத்துல வெள்ளப்பெருக்கு தடுக்கணும்னா நீர் மேலாண்மை  தான் ஒரே வழி.

சூரிய ஒளி எந்தெந்த நேரங்கள்ல கட்டிடத்தின் எந்தெந்த பகுதியில விழுகுதுனு பார்க்கிறோம். அதுக்கு ஏத்தமாதிரி வீட்டுல சூரிய ஒளி படும் பாகங்கள்ல என்னென்ன விஷயங்கள் வைக்கலாம்னு சிந்திக்கிறோம்.

 Modern home image

சூரிய ஒளி, காற்று, கட்டிடத்தின் கோணம்- இந்த மூன்றையும் அடிப்படையா வச்சு கட்டிடங்களை எப்படி வடிவமைக்கலாம் முடிவு செய்யும். அப்போ அந்த வீடு வசதியா இருக்கும். அதுதான் விஷயம்… என்கிறார் சுஹாசினி

இந்த இரண்டு கருத்தாங்களையும் நகரங்களை உருவாக்கும்போது செயல்படுத்தினால் நாம் நீடித்த தன்மையின் முதல் படியை தொடுகிறோம் என்று கூறலாம். கட்டிடங்களை கட்டும் போது கட்டிடத் தொழில் தான் உலகின் ஆற்றலுக்கான முக்கிய பங்காற்றாகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

சிமெண்ட் மற்றும் கம்பிகளை குறைப்பதைத் தாண்டி கட்டிடத் தொழில் மூலம் கழிவுகளாக குப்பைமேட்டுக்கு செல்லும் மூன்று பொருட்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. கட்டிடக் கழிவுகள் பொடியாக்கப்பட்டு அவை மண் சுவர்களாக பயன்படுத்தப்படுகிறது.

வெப்பத்தை குறைப்பதற்காக நிராகரிக்கப்பட்ட மூன்றாம் தர செராமிக் டைல்ஸ்கள் மேல் தளத்திற்காகவும், கழிவுகளாக வெளியேறிய சுண்ணாம்புத் தூள்கள் சுவற்றுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

இதுகுறித்து Humanscapes கட்டடக் கலைஞர் ஆர். உலகநாதன் DW Tamil யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இங்கே..

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle Dw Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment