ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பின்பும் கொஞ்சம் சோம்பு மெல்லுங்கள்... அல்சர் குணமாகும்; டாக்டர் ஷர்மிகா
அல்சர் பிரச்னையை நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகள் மூலமாகவும் எளிதாக குணப்படுத்த முடியும். அந்த வகையில், அல்சர் குணமாக நாம் ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பிறகு சிறிதளவும் சோம்பு சாப்பிட அறிவுறுத்துகிறார் மருத்துவர் ஷர்மிகா.
அல்சர் பிரச்னையை நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகள் மூலமாகவும் எளிதாக குணப்படுத்த முடியும். அந்த வகையில், அல்சர் குணமாக நாம் ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பிறகு சிறிதளவும் சோம்பு சாப்பிட அறிவுறுத்துகிறார் மருத்துவர் ஷர்மிகா.
ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பின்பும் கொஞ்சம் சோம்பு மெல்லுங்கள்... அல்சர் குணமாகும்; டாக்டர் ஷர்மிகா
இப்பொழுது உள்ள லைப் ஸ்டைல் காரணமாகவும் ஒழுங்கற்ற உணவு முறை காரணமாகவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தான் அல்சர். இந்த அல்சர் பிரச்சனையை நாம் மருந்துகளினால் மட்டுமே குணப்படுத்த முடியும் என நினைப்பது மிக தவறாகும். இந்த பிரச்னையை நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகள் மூலமாகவும் எளிதாக குணப்படுத்த முடியும். அந்த வகையில், அல்சர் நோய் குணமாக நாம் ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பிறகு சிறிதளவும் சோம்பு சாப்பிட அறிவுறுத்துகிறார் மருத்துவர் ஷர்மிகா.
Advertisment
அல்சர் என்றால் என்ன?
அல்சர் என்றால் வயிற்றில் உருவாகும் புண்கள். உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் முன்பகுதியிலிருக்கும் உட்சுவரில் உருவாகும் புண்களைக் குடல் புண் அல்லது வயிற்றுப்புண் என்கிறோம். இரைப்பையில் ஏற்படும் புண்களை கேஸ்ட்ரிக் அல்சர் என சொல்லலாம். உணவுப்பாதையில் ஏற்படும் புண்களை ஈசோபேகல் அல்சர் என சொல்லலாம். சிறுகுடலின் முன்பகுதியில் உள்ள புண்களை டியோடனல் அல்சர் என சொல்லலாம்.
அல்சர் வர காரணங்கள் என்னென்ன?
பாக்டீரியா தொற்று (Helicobacter pylori) , மன உளைச்சல், அதீத கவலை, தவறான உணவுப் பழக்கம், சில வகை மருந்துகளை உட்கொள்வது, அதிகமாகக் காபி குடிப்பது, மசாலா, கார உணவுகளை அதிகமாக சாப்பிடுவது போன்ற காரணங்களால் அல்சர் ஏற்படுகிறது.
Advertisment
Advertisements
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
காபியில் உள்ள கெஃபைன், வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிப்பதால், வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் காபியைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். கடுமையான வயிற்று வலி ஏற்படுவதோடு, நோயின் தீவிரத்தையும் அதிகமாக்கிவிடும். கெஃபைன் அதிகமாக இருக்கும் டீ, சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். காரமான உணவுகள், மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதால், எதுக்களித்தல் பிரச்னை அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது, கடுமையான வயிற்றுவலி ஏற்படும். அதனால், மிளகாய், மிளகு, மிளகாய்ப் பொடி ஆகியவற்றை உங்கள் மெனுவில் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.
பால் குடித்தால் வயிற்றுப் புண் குணமாகும், எரிச்சல் ஏற்படாது என்று சிலர் கூறுவார்கள். இது தவறாகும். பால் வயிற்றிலுள்ள அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. அது மட்டுமல்லாமல் பாலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் புரதம், நோய் குணமடைவதைத் தாமதப்படுத்துகிறது. சோடா மற்றும் குளிர்பானங்களுக்கு முற்றிலுமாகத் தடைப்போடுங்கள். அதில் உள்ள சிட்ரிக் அமிலம் வயிற்றின் அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. இதனுடன் செரிமானக் கோளாறுகளையும் உண்டாக்குகிறது. குறிப்பாக, மதுப்பழக்கம் உள்ளவர்கள், குடிப்பதை நிறுத்த வேண்டும். இந்தப் பழக்கம் நோயைத் தீவிரமாக்கும். அதுமட்டுமல்ல வயிறு மற்றும் சிறுகுடலில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு, வீக்கம்கூட உண்டாகலாம். ரெட் மீட்டை உணவில் சேர்த்துக்கொள்ளாதீர்கள். இதில் அதிக அளவில் புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளதால், உணவு செரிமானமாக நீண்ட நேரம் எடுக்கும். அதனுடன் நோயின் வீரியத்தையும் அதிகப்படுத்தும்.
அல்சர் குணமாக வீட்டு வைத்தியம்:
காலை எழுந்தவுடன் ஆயில் புல்லிங் செய்த பிறகு தண்ணீர் குடித்துவிட்டு, உருகிய நிலையில் உள்ள வெண்ணெயை ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு 2 டம்ளர் வெதுவெதுப்பான நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், அல்சர் பிரச்னை சரியாக வாய்ப்பு உள்ளது. மோருடன் கறிவேப்பிலை சேர்ந்த அருந்த வேண்டும். இது உணவுக்குழாயில் உள்ள புண்களை சரி செய்கிறது. ஒவ்வொரு முறையும் சாப்பிட பிறகு சிறிதளவு சோம்பு மென்று முழுங்க வேண்டும். இனிப்பு சோம்பை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுக்கிறார் மருத்துவர் ஷர்மிகா.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.