நார்மல் சப்பாத்தி சாப்பிட்டு உங்களுக்கு சலித்து விட்டதா? ஏதாவது வித்தியாசமாக சாப்பிட ஆசையாக இருக்கிறதா? சில்லி சப்பாத்தி ரெசிபி இங்கே உள்ளது. இது காலை மற்றும் இரவு உணவுக்கு பொருத்தமாக இருக்கும். முக்கியமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
சில்லி சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்
சப்பாத்தி- 5
தக்காளி- 2
கரம் மசாலா- சிறிதளவு
மிளகாய் பொடி- சிறிதளவு
சீரகத் தூள்- 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்- 1 டீஸ்பூன்
உப்பு- 1 சிட்டிகை
செய்முறை
முதலில் கோதுமை மாவுடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து சப்பாத்தி போடவும், அதனைப் பொடிப்பொடியாக வெட்டிக் கொள்ளவும். ஒருவேளை முதல் நாள் போட்ட சப்பாத்தி மீந்து இருந்தால், அதை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தப் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து தக்காளியை போட்டு வதக்கவும். பின் கரம் மசாலா, மிளகாய் பொடி, மஞ்சள் தூள், சீரகத்தூள், உப்பு போட்டு நன்றாக வதக்கிய பிறகு வெட்டி வைத்த சப்பாத்தியை போட்டு கிளறி இறக்கவும்.
சுவையான சில்லி சப்பாத்தி ரெடி…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“