Advertisment

40 கிலோ முந்திரி, வெளிநாட்டு மது: புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்!

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் கிலோ கேக் தயாரிக்கும் பணியை சட்டப்பேரவை தலைவர் செல்வம் தொடங்கிவைத்தார். இந்தக் கேக் உலர் பழங்கள், வெளிநாட்டு மதுபானங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Christmas cake making in Puducherry

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணிகள் தொடங்கின.

puducherry | christmas | புதுச்சேரி பூரணாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் உலர் பழங்கள்,வெளிநாட்டு மதுபானங்களை கொண்டு 40 கிலோ எடையில் தயாராகும் கிறிஸ்மஸ் கேக் கலவை செய்யும் பணியினை சபாநாயகர் செல்வம் தொடங்கிவைத்தார்.

புதுச்சேரி புரணாங்குப்பத்தில் உள்ள தனியார் ஓட்டலில்  கிறிஸ்மஸ் பண்டிகையை யொட்டி கேக் செய்யும் திருவிழா நடைபெற்றது.

இதில் 40 கிலோ அளவில் முந்திரி, திராட்சை, பாதாம் மற்றும் பல்வேறு  உலர் பழங்கள், ஒயின் வகைகள் மற்றும் வெளிநாட்டு உயர் ரக மதுபானங்கள் சேர்க்கப்பட்டன.

Advertisment

ஊறவைக்கப்பட்ட இந்தக் கலவை 40 நாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு  கிறிஸ்மஸ் பண்டிகைக்கு சில தினங்களுக்கு முன்  கிறிஸ்மஸ் கேக்காக  வாடிக்கையாளர்கள் முன் கொண்டுவரப்படும்.

இந்நிகழ்ச்சியில் ரிசார்ட் நிர்வாக இயக்குனர் ஜெய பிரகாஷ், செயல் இயக்குனர்கள் ராஜ் திலக், அனு இலக்கியா மற்றும் சுற்றுலா பயணிகள்  கலந்துகொண்டனர்.

செய்தியாளர் பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Puducherry Christmas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment