ரொம்ப சுவையான தேங்காய் தோசையை இப்படி செய்து பாருங்க. ருசி சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1கப்
உளுந்தம் பருப்பு – கால் கப்
தேங்காய் – கால் மூடி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்
செய்முறை : அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து இதில் தேங்காய் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். தொடர்ந்து 10 மணி நேரம் ஊற வைக்கவும். தொடர்ந்து இந்த மாவை தோசைக் கல்லில் ஊற்றி தோசைகளாக சுடவும்.