செப் தீனா செய்வது போல நீங்களும் தேங்காய் பொடி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 தேங்காய்
புளி சின்ன அளவு
1 ஸ்பூன் இஞ்சி
3 ஸ்பூன் சீரகம்
6 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
12 வத்தல்
பூண்டு 8
மிளகாய் பொடி அரை ஸ்பூன்
வெல்லம் 2 சிட்டிகை
உப்பு
பெருங்காயம் ¼ ஸ்பூன்
கருவேப்பிலை
தேங்காய் எண்ணெய் 4 ஸ்பூன்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய், சீரகம், இஞ்சி, உளுந்தம் பருப்பு , பூண்டு சேர்த்து கிளரவும். தொடர்ந்து தேங்காய் துருவியது, கருவேப்பிலை, வெல்லம் , பெருங்காயம், புளி, மிளகாய் பொடி சேர்த்து கிளரவும். நன்றாக நிறம் மாற வேண்டும். தொடர்ந்து இதை அரைத்துகொள்ளவும். இதை நீங்கள் ஒரு மாதம் வரை வைத்து சாப்பிடலாம்.