சுட்டெரிக்கும் வெயிலில் 15 அடி உயர டவரில் யோகாசனம்: 12 வயது கோவை சிறுவன் உலக சாதனை

சிறுவன் சர்வஜித், தற்போது 15 அடி உயரத்தில் யோகாவில் புதிய உலக சாதனை செய்துள்ளார்.

சிறுவன் சர்வஜித், தற்போது 15 அடி உயரத்தில் யோகாவில் புதிய உலக சாதனை செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

கோவையில் 15 அடி உயரத்தில் ஹஸ்த கோணாச  னத்தில் ஏழு நிமிடங்கள்  20 விநாடிகள் தொடர்ந்து  நின்றபடி, 12 வயது சிறுவன் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார். 
கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த சரண்யா மற்றும் பாலசுந்தரம் தம்பதியரின் மகன் சர்வஜித் நாராயணன், 12 வயதான இவர் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார்.
சிறு வயது முதலே  யோகாவில் இரண்டு  கின்னஸ் சாதனை உட்பட வீடு முழுவதும் கோப்பைகள், விருதுகள், சான்றிதழ்கள் குவித்து வைத்துள்ள சிறுவன் சர்வஜித், தற்போது 15 அடி உயரத்தில் யோகாவில்  புதிய  உலக சாதனை செய்துள்ளார்.
சிறுவன் சர்வஜித் பயிலும் வேலம்மாள் போதி பள்ளியில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில் பள்ளி வளாகத்தில் 15 அடி உயரத்தில் டவர் ஒன்று அமைக்கப்பட்டது.
இதன் மீது ஏறிய சர்வஜித் அஷ்ட கோணாசனம் எனும் ஆசனத்தை தொடர்ந்து ஏழு நிமிடங்கள் 20 விநாடிகள் செய்து, யூனியன் உலக சாதனை புத்தகத்தி்ல் இடம் பிடித்தார்.
ரஷ்ய நாட்டில் இருந்து வந்த யூனியன் உலக சாதனை புத்தகத்தின் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட்,  சர்வஜித் நாராயணின் சாதனையை நேரடியாக கண்காணித்தார்.

Advertisment

coimbatore

தொடர்ந்து சிறுவனின் சாதனையை அங்கீகரித்த அவர் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்   யூனியன் உலக சாதனை பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
15 அடி உயரத்தில் கைகளை மட்டுமே பேலன்ஸ் செய்து சுட்டெரிக்கும் வெயிலில் ஆங்கிள் போஸில் யோகா செய்த சிறுவனின் சாதனையை அவரது பள்ளியில் பயலும் சக மாணவர்கள் ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கைகளை தட்டி உற்சாகபடுத்தினர். 
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: