கோவையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பொன்னியின் செல்வன் படத்தின் ’பொன்னி நதி’ பாடலுக்கு ஒரே இடத்தில் 408 மாணவிகள் நடனமாடியது பார்வையாளர்களை வியக்க வைத்தது.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் வைர விழா மற்றும் கல்லூரியின் நிறுவன தினம் நடைபெற்றது. இதில் இனி வரும் காலங்களில் அழைக்கும் வகையில், கிருஷ்ணம்மாள் காலேஜ் ஃபார் வுமன் என புதிய லோகவை அறிமுகப்படுத்தினர்.

முன்னதாக மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பொன்னியின் செல்வன் படத்தில் வரும் பொன்னி நதி பாடலுக்கு 408 கல்லூரி மாணவிகள் இணைந்து பெண் சக்தியை சித்தரிக்கும் வகையில் ஒரே இடத்தில் ஒரே மாதிரியான உடை அணிந்து நடனமாடி அசத்தினர்.
மாணவியரின் இந்த குழு நடனம் பார்வையாளர்களை வியக்க வைத்தது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“