/indian-express-tamil/media/media_files/2025/02/16/TuF0gO1zJPr4amALxFVD.jpg)
கோவை மாவட்டத்தில், ஞாயிற்றுக் கிழமைதோறும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று 9-வது வாரமாக, கொடிசியா பகுதியில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற இந்நிகழ்வில் சுதந்திரநாச்சினி என்ற மாணவியின் கரகாட்டத்தை அனைவரும் வியந்து பார்த்தனர். இதேபோல், பறை இசை நிகழ்ச்சிகள், ரௌத்திரம் குழுவினரின் சிலம்பாட்டம், தற்காப்பு கலை போன்ற நிகழ்வுகளும் இன்று நடத்தப்பட்டன.
இவை தவிர வழக்கமாக நடைபெறும் ஃபேஸ் பெயிண்டிங், கிரிக்கெட், காகித ராக்கெட், பம்பரம், பரமபதம், உடற்பயிற்சி ஆகியவையும் இதில் இடம்பெற்றிருந்தன. தனியார் கல்லூரி மாணவர்களின் போதைக்கு எதிரான மௌன நாடகத்தை அனைவரும் பாராட்டினர்.
இந்நிலையில், அடுத்த வாரத்துடன் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்வு நிறைவு பெறுகிறது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.