கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக ஒன்பதாவது சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது. இந்த திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டு சுற்றுலா துறை சார்பில் நடத்தப்படும் இந்த பலூன் திருவிழாவில் பிரான்ஸ்ஜெர்மன்நெதர்லேண்ட் 8 நாடுகளில் இருந்து 11 வகையான பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பிலும் ஒரு பலூன் பறக்க விடப்பட்டது.
மேலும் குழந்தைகளை கவரும் வகையில் தவளை, யானை, மிக்கி மவுஸ் உருவம் கொண்ட பலூன்கள் இடம் பெற்று இருந்தன.
மூன்று நாட்களும் காலை, மாலை என இரு வேலைகளிலும் பலூன்கள் வானில் பறக்க விடப்படுகிறது.
இந்த பலூன் திருவிழா முன்னிட்டு உணவுத் திருவிழா மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
வானில், பலூன்கள் அணிவகுத்து செல்வது பார்ப்பதற்கு கண் கவரும் விதமாக உள்ளது. புதிதாக குழந்தைகளை கவரும் விதமாக பலூன்கள் உள்ளது.வரும் வருடத்தில் பலூனில் பறக்க அனுமதி அளித்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் சர்வதேச பலூன் திருவிழாவிற்கு ஐந்து துறைகளில் அனுமதி வாங்காததால், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதாக வருவாய்த்துறை என தெரிவித்துள்ளனர்.
பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“