/indian-express-tamil/media/media_files/2025/05/26/9FvDifPxIO9lLfYfK9Fh.jpeg)
சர்வதேச அளவில் நடைபெற்ற சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி!
சர்வதேச சிலம்பம் சங்கம் சார்பாக 5-வது சர்வதேச அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவை வெள்ளகிணறு பகுதியில் நடைபெற்றது. இந்த போட்டியில் மலேசியா,தாய்லாந்து,ஸ்ரீலங்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் உள்நாட்டில் பல்வேறு மாநிலங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் குத்துவரிசை, நெடுங்கம்புவீச்சு, நடுக்கம்புவீச்சு, மான் கொம்பு, வேல் கம்பு, இரட்டைக்கம்பு, சுருள்வாள், தொடுமுறை கம்பு சண்டை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
4 வயது முதலான பள்ளி மாணவர்கள் துவங்கி கல்லூரி மாணவர்கள் வரை கலந்துகொண்ட இப்போட்டியில் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் அசத்தலாக தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். இதனை சர்வதேச சிலம்பம் கமிட்டி தலைவர் முகம்மது சிராஜ் அன்சாரி மற்றும் செயலாளர் தியாகு நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.