கோவையில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான லோகோ இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதனை, தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவரும், தி.மு.க மாவட்ட செயலாளருமான முருகேசன் வெளியிட்டார்.
செட்டிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட எல் அண்ட் டி பைபாஸ் ரோடு பகுதியில், வரும் 27-ஆம் தேதி ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் முருகேசன் முன்னிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கான மைதானம் மற்றும் அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் ஜல்லிக்கட்டு போடிக்கான லோகோ இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பேரவை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி - பி. ரஹ்மான்