ஆசியாவிலேயே பெரியது; கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை, வழிபாடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

author-image
WebDesk
New Update
puliyakulam

விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது இன்று (செப்.7) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வண்ண வண்ண விநாயகர் சிலைகள் பொதுமக்களால் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. 

Advertisment

அதன் ஒரு பகுதியாக ஆசியாவிலேயே இரண்டாவது உயரமான விநாயகர் சிலை இருக்கக்கூடிய கோவையில் பிரசித்தி பெற்ற புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடைபெறுகிறது. இங்குள்ள விநாயகர் சிலை 19 அடி உயரமும் 10 அடி அகலமும் கொண்ட சிலையாகும்.

இன்றைய தினம் விநாயக சதுர்த்தியை முன்னிட்டி 50 கிலோ சந்தன காப்பும் இரண்டு டன் மலர்களாலும் ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை முதலே விநாயகருக்கு 16 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து விநாயகரை வழிபட்டு வருகிறார்கள். அதேபோல் இன்றைய தினம் அன்னதானமும் வழங்கப்படுகிறது. 

Advertisment
Advertisements

மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் வரிசையாக நின்று விநாயகரை வழிபடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இப்பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

செய்தி: பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: