Advertisment

தென்னிந்தியாவில் முதல் முறை- புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோவையில் பிரமாண்ட ட்ரோன் ஷோ

தென்னிந்தியாவில் முதல் முறையாக 2024 புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோவையில் பிரமாண்ட ட்ரோன் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை தொழில் நகரமாக உள்ளது. குறிப்பாக சென்னையை அடுத்து கோவையில் அதிக மக்கள் வசித்து வருகின்றனர்.

Advertisment

அதே போல கோவை மாநகராட்சிக்கு உட்பட இடங்களை அழகுபடுத்தும் விதமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இதனிடையே கோவை மக்களை மகிழ்விக்கும் வண்ணம் 2024 புத்தாண்டை வரவேற்கும் விதமாக மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி மற்றும் ட்ரம்ப் அமைப்பின் சார்பாக டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 12.30 மணி வரை கோ ஃபிக், கோ கலட்டா எனும் தலைப்பில் 8க்கும் மேற்பட்ட நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

Coimbatore

Coimbatore

குறிப்பாக 20 ஆயிரம் எல்இடி கொண்ட லேசர் ஷோ, லியோ பட ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியில் வருவது போன்ற 300க்கும் மேற்பட்ட ட்ரோன் ஷோ, நட்சத்திரங்கள் பங்கேற்கும் இசை மற்றும் மேடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறியதாவது; தென்னிந்தியாவில் எங்கேயும் நடத்திடாத வகையில் முதன் முறையாக கோவையில் குடும்பத்துடன் மகிழ்விக்க புதிய ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரம் மக்கள் வரை பங்கேற்கலாம். இங்கு வரும் மக்களுக்கு நுழைவு கட்டணம் இல்லை. மதுபானம் இல்லாமல் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம்.

பொதுமக்களுக்கான  பாதுகாப்பு மற்றும் பார்க்கிங் வசதியினை அதிகரித்துள்ளோம். மேலும்  மாநகர காவல் துறையுடன் இணைந்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்       

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment