Advertisment

கோவையில் காவலர் பொங்கல் விழா: மாட்டு வண்டி ஓட்டி உற்சாகப்படுத்திய ஆணையர்

பொங்கல் விழாவில் பொங்கல் வைத்தும், மாட்டு வண்டி ஓட்டியும் காவலர்களை உற்சாகப்படுத்திய மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்

author-image
WebDesk
New Update
Pongal poli.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை மாநகர காவல்துறையினர் பொங்கல் விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினர். தமிழகத்தில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனை வெளிப்படுத்தும் வண்ணமாக தமிழகத்தில் பல்வேறு அரசு, தனியார் கல்லூரிகள், அலுவலகங்களில் பொங்கல் விழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisment

அந்த வகையில் கோவை அவிநாசி சாலையில் உள்ள கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் பங்குபெற்ற பொங்கல் விழா நடைபெற்றது. காவலர்களுக்கு விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது.

poli pongal.jpeg

அதன் பிறகு கோவை மாநகர் காவல்துறை சார்பில் பொங்கல் வைத்தல், பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், சாக்குப் போட்டி, மெதுவாக சைக்கிள் ஓட்டுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. பொங்கல் விழாவில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பொங்கல் வைத்து மாட்டு வண்டி ஓட்டினார்.

நிகழ்ச்சியை தொடர்ந்து சைக்கிள் ஓட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறையை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் அவர்கள் குழந்தைகளுக்கு பரிசளிக்கப்பட்டது.

செய்தி: பி.ரஹ்மான் 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil 

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment