/indian-express-tamil/media/media_files/2025/01/11/vKNFfBQmixR0VbvkLyJk.jpg)
பொங்கல் விடுமுறைக்காக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கோவை மாவட்ட ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
கோவையில், வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி படிக்கும் மாணவர்கள், வேலை பார்ப்பவர்கள் என பலரும் தங்கள் ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் இயல்பை விட மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.
பெரும்பாலான மக்கள் சிறப்பு ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளனர். இதனாலும், அதிகப்படியான மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனினும், ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் பேருந்துகளில் ஊருக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, நகரின் முக்கிய பகுதிகள் திருவிழா போல் காட்சியளிக்கிறது.
செய்தி - பி.ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.