/indian-express-tamil/media/media_files/2025/02/23/nMw9KxPzEEYbgqOCNiI5.jpg)
கோவை மாவட்டம், ராம் நகரில் உள்ள சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. அதன்படி, கடந்த 1975-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி படித்தவர்கள், தற்போது மீண்டும் சந்தித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 120-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். கடந்த ஆண்டு மே மாதம் முதல் இதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது அனைவரும் சந்தித்துள்ளனர்.
இது மட்டுமின்றி கடந்த 1975-ம் ஆண்டு இவர்களுக்கு வகுப்பு நடத்திய 8 ஆசிரியர்களையும் வழவழைத்து, அவர்களுக்கு தலா ரூ. 30 ஆயிரம் நிதி உதவு வழங்கினர். நிகழ்வுக்கு வர முடியாத 4 ஆசிரியர்களை, அவர்களின் வீட்டிற்கு சென்று சந்தித்து நிதி வழங்க இருப்பதாக முன்னாள் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வின் போது அனைவரும் தங்கள் கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும், இன்றைய தினத்தையும் தங்களால் மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தாங்கள் பள்ளியில் பயின்ற காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டனர்.
செய்தி - பி.ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.