கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் மஹா கணபதி மற்றும் மாகாளியம்மன் கோயிலின் மூன்றாம் ஆண்டு சக்தி அழைத்தல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வள்ளி முருகன் கலைக் குழுவினரின் வள்ளி கும்மி மற்றும் கம்பத்து ஆட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட பெண்கள் பாரம்பரிய உடையணிந்து வள்ளி கும்மிட்டாட்டம் ஆடினர்.
இந்த விழாவின் தொடக்கமாக வள்ளி கும்மி ஆசிரியர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுற்று வட்டார பகுதி மக்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தி - பி ரஹ்மான்