Advertisment

விஜயதசமி பண்டிகை: சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோலாகலம்

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் அதிகாலை முதல் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

இன்று விஜயதசமி முன்னிட்டு சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் எனும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

Advertisment

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி  அனைத்து ஐயப்பன் கோவில்களிலும் நடைபெறும். இந்நிகழ்வில் ஐயப்பனை வழிபட்டு குழந்தைகளை அரிசி தட்டில் எழுத்துக்களை எழுத வைத்தால் கல்வியறிவு மேம்படும் என்பது ஐதீகம். அதன்படி பெரும்பாலான ஐயப்பன் கோவில்களில் இந்த வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் அதிகாலை முதல் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து ஐயப்பனை வழிபட்டு அரிசி தட்டில் எழுத்துக்களை எழுதினர்.

விஜயதசமியை முன்னிட்டு கோவிலில் ஏராளமான பக்தர்கள் வந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment