/indian-express-tamil/media/media_files/dyCLok1eRSpnCwxbRZog.jpeg)
Coimbatore
கோவையின் பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் கோயம்புத்தூர் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கோயம்புத்தூர் விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் மாநகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக கோவை கொடிசியா மைதானத்தில் மாபெரும் உணவு திருவிழா வெள்ளிக்கிழமை (ஜன.5) தொடங்கியது.
ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம்சார்பில் நடைபெறும் இந்த டேஸ்ட் ஆஃப் கோயம்புத்தூர் உணவு திருவிழாவை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் உணவு திருவிழாவில் சைவம், அசைவம் என கோவையை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட உணவககங்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து பொதுமக்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக பாரம்பரிய தமிழ் கலைகளான ஒயிலாட்டம், பறையாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக உணவுத் திருவிழா தொடக்க நிகழ்ச்சியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் வரவழைக்கப்பட்டு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.