இது வித்தியாசமான ஒரு சட்னி ரெசிபி. ருசியில் இதை அடிச்சுக்க முடியாது.
தேவையான பொருட்கள்
2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1 டேபிள் ஸ்பூன் சீரகம்
4 பூண்டு
5 காய்ந்த மிளகாய்
1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
3 டேபிள் ஸ்பூன் வேர்கடலை
1 தக்காளி
சிறிய அளவு புளி
தாளிக்க : எண்ணெய், கடுகு, வத்தல் 2, கருவேப்பிலை
செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில், சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து அதில் வேர்கடலை, தக்காளி சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் இதை மிக்ஸியில் சேர்த்து அரைத்துகொள்ள வேண்டும். இதில் எண்ணெய் சூடாக்கி கடுகு, வத்தல், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும். சூப்பரான கோலார் சட்னி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“