வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. உக்ரைன் – ரஷ்யா போர் தொங்கியதையடுத்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து, பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை அதிகளவில் உயர்ந்தது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியதையடுத்து, கடந்த 4 மாதங்களாக பெட்ரோல்- டீசல் விலை அதிகரிக்கவில்லை.
இந்நிலையில் இஸ்ரேல் -ஹமாஸ் போர் தொடங்கியது, முதல் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதையொட்டி வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளது. இதன்படி 19, கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.101 உயர்ந்துள்ளது. அதன் விலை ரூ.1999 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றம் ஏதுமின்றி ரூ. 918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“