குடல் என்பது ஜீரண மண்டலத்தின் ஒரு பகுதியாகும். குடலில் ஏற்படும் கோளாறுகள் உடல் இயக்கத்தை பெருமளவில் பாதிக்கிறது. அதில் முக்கியமானது மலச்சிக்கல்.
Advertisment
ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கும் குறைவான தடவை மலம் வெளியேறினால், அல்லது மலம் மிகவும் வலியுடனுடம் மிகவும் உலர்ந்தும் வெளியேறினால் அதைத்தான் மலச்சிக்கல் என ஆங்கில மருத்துவம் கூறுகிறது. நபருக்கு நபர் குடலின் செயல்பாடுகள் மாறுபடும்.
வாழ்வில் எல்லோருக்கும் எப்பொழுதாவது மலச்சிக்கல் ஏற்படும். இது சில காலம் நீடிக்கும். இது எதனால் ஏற்படுகிறது என புரிந்து கொண்டால் இதைத் தடுக்க முடியும்.
இங்கு டாக்டர் செங்கோட்டையன் மலச்சிக்கல் பிரச்னைக்கு தற்காலிக தீர்வு ஒன்றை கூறுகிறார்.
Advertisment
Advertisements
கடுக்காய், நம் குடல் நலத்துக்கு நல்லது. இது நல்ல மலமிளக்கியாக செயல்படும். பசியை தூண்டும். ஜீரணத்தை தூண்டும். ரத்த ஓட்டத்தை சீர் செய்யக்கூடியது.
தினமும் 5 முதல் 7 கிராம் வரை கடுக்காய் சூரணம் அல்லது லேகியம், இரவு தூங்கும் முன் சாப்பிடலாம்.
அதேபோல திரிபலா சூரணம் தினமும் 5 முதல் 7 கிராம் வரை தூங்கும் முன் சாப்பிடலாம். ஒருவேளை காலையில் எழுந்தும் மலம் கழிக்கும் தூண்டுதல் எதுவும் உங்களுக்கு வரவில்லை என்றால், இதை காலையிலும் வெந்நீரில் கலந்து சாப்பிடலாம். தேவைக்கேற்ப இந்த அளவை குறைத்தும் எடுத்துக் கொள்ளலாம்.
மூன்றாவதாக வெந்தயம். இதை வறுத்து அரைத்து பொடியாக வைத்துக் கொள்ளலாம். அல்லது பச்சை வெந்தயம் அப்படியே சாப்பிடலாம்.
இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் வெந்தயம் சாப்பிட்டு, தண்ணீர் குடிக்கவும். காலையில் எழுந்ததும் இரண்டு டம்ளர் வெந்நீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். இதனால் உங்கள் மலக்குடல் வேகமாக இயங்கி, குடலில் ஒட்டியிருக்கும் கழிவுகள் வெளியேறும்.
இந்த மூன்றையும் நீங்கள் மாறிமாறி சாப்பிடலாம். அல்லது ஏதாவது ஒன்றை தொடர்ந்து சாப்பிடலாம். குறிப்பாக மலச்சிக்கல் பிரச்னைக்கு இரவு நேரத்தில் இந்த மருந்துகளை சாப்பிடுவது அற்புதமான பலனை கொடுக்கும், என்கிறார் டாக்டர் செங்கோட்டையன்.