/indian-express-tamil/media/media_files/2025/09/03/asparagus-2025-09-03-16-35-45.jpg)
Asparagus cooking Tips
அஸ்பாரகஸ்... இந்த பெயர் பலருக்கும் புதிதாக இருக்கலாம், ஆனால் இதன் சுவையும், நன்மைகளும் உலகெங்கும் பிரபலம். இதை தமிழில் தண்ணீர் விட்டான் கிழங்கு அல்லது நீலாவரி கிழங்கு, சதாவரி என்று சொல்வதுண்டு. பார்க்க வித்தியாசமாக இருக்கும் இந்த காய், பெரும்பாலும் மேலைநாட்டு உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அஸ்பாரகஸை சமைப்பதற்கு முன்பு அதை உரிப்பதா, வேண்டாமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. ஒருவேளை நீங்கள் அஸ்பாரகஸ் சமைக்க விரும்பினால், இந்த ரகசியம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
அஸ்பாரகஸை ஏன் உரிக்க வேண்டும்?
அஸ்பாரகஸ் தண்டின் வெளிப்புறத் தோல் சற்று கடினமாகவும், நாராகவும் இருக்கும். குறிப்பாக பெரிய தண்டுகளில் இந்த கடினத்தன்மை அதிகமாக இருக்கும். இதனை அப்படியே சமைத்தால், சாப்பிடும்போது அந்த நார்த் தன்மை சுவையை கெடுத்துவிடும்.
ஆனால், அஸ்பாரகஸ் தோலை உறித்துவிட்டால், அதன் உள்ளே இருக்கும் மென்மையான, சுவையான பகுதி மட்டுமே கிடைக்கும். இது அஸ்பாரகஸின் உண்மையான சுவையை முழுமையாக அனுபவிக்க உதவுகிறது. பெரிய தண்டுகள் பார்ப்பதற்கு பெரியதாக இருந்தாலும், அவற்றை உரிப்பது எளிது, மேலும் உரித்த பிறகு நிறைய மென்மையான சதைப்பகுதி கிடைக்கும்.
சிறிய அஸ்பாரகஸ் மென்மையானது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், சிறிய தண்டுகளில் தோல் பகுதி அதிகம் இருக்கும். இதனால், சமைத்த பிறகு அவை கடினமாக இருக்கும். எனவே, சின்ன தண்டுகளையும் உரிப்பது அவசியம்தான்!
அஸ்பாரகஸை உரிப்பது ஒரு சிறிய வேலை போலத் தோன்றலாம். ஆனால், அது உங்கள் சமையலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தோலை உரிப்பதன் மூலம், தண்டின் மேல் பகுதி முதல் கீழ் பகுதி வரை முழுவதையும் வீணாக்காமல் சாப்பிடலாம்.
அடுத்த முறை அஸ்பாரகஸ் சமைக்கும்போது, இந்த எளிய நுட்பத்தை முயற்சித்துப் பாருங்கள். அதன் சுவையில் நீங்கள் வியந்து போவீர்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.