கருப்பாக மாறும் செம்பு, பித்தளை பாத்திரங்கள்: சுத்தம் செய்வது எப்படி?

பாட்டில்கள் மற்றும் கிண்ணங்களைப் பொறுத்தவரை, கரைசலை உள்ளே ஊற்றி, சில நிமிடங்களுக்கு அவற்றை நன்கு குலுக்க வேண்டும்.

பாட்டில்கள் மற்றும் கிண்ணங்களைப் பொறுத்தவரை, கரைசலை உள்ளே ஊற்றி, சில நிமிடங்களுக்கு அவற்றை நன்கு குலுக்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
Copper

Copper utensils Cleaning hacks

செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களில் உணவுகளை சமைத்து சேமித்து வைப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அவற்றை சுத்தம் செய்யும் போது அவை சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

Advertisment

இந்த பாத்திரங்கள் சிறிது காலம் கழித்து கருப்பாக மாறிவிடும். மேலும் சோப்பு கொண்டு கழுவுவது அவற்றின் அசல் நிறத்திற்கு கொண்டு வர உதவாது. எந்த அளவு ஸ்க்ரப்பிங் செய்தாலும் பாத்திரங்களின் நிறம் மாறாது.

ஆனால் இதற்கு ஒரு எளிய தீர்வு இருக்கிறது.

ஃபுட் விலாகர் ரேஷு, செம்பு மற்றும் பித்தளைப் பொருட்களைச் சுத்தம் செய்வதற்கான எளிதான, பயனுள்ள உதவிக்குறிப்பை யூடியூப் வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.

Advertisment
Advertisements

இந்த கரைசலைத் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் சம அளவு சிட்ரிக் அமிலம் (எலுமிச்சை) மற்றும் உப்பு போடவும். பிறகு ஒரு கப் தண்ணீர் சேர்த்து உப்பு முழுவதுமாக கரையும் வரை நன்கு கலக்கவும்.

இப்போது சின்ன ​​தட்டுகள், பூஜை சாமான்கள் போன்ற செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை சுத்தம் செய்ய, அவற்றை சில நிமிடங்கள் கரைசலில் நனைத்து, வழக்கமான தண்ணீரைப் பயன்படுத்தி கழுவவும்.

Copper Utensils

பாட்டில்கள் மற்றும் கிண்ணங்களைப் பொறுத்தவரை, கரைசலை உள்ளே ஊற்றி, சில நிமிடங்களுக்கு அவற்றை நன்கு குலுக்க வேண்டும். பாத்திரங்கள் சில நிமிடங்களில் அவற்றின் அசல் பிரகாசத்தையும் நிறத்தையும் பெறும்.

இது செப்பு பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கான பாரம்பரிய முறையாகும். ஒருவேளை எலுமிச்சம்பழம் கிடைக்கவில்லை என்றால் அதற்கு பதிலாக வினிகரைப் பயன்படுத்தலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: