/indian-express-tamil/media/media_files/2025/04/09/tV5HrbWbzmgd6MEqxhDg.jpg)
உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டு ஆண்டவர் கோவிலுக்கு அடிக்கடி விசிட் அடிக்கும் ஒன்றை யானையால் பக்தர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் அடிக்கடி ஒற்றை யானை வருவதும், அதனை வனத் துறையினர் விரட்டுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் வனத்துறையில் வறட்சியான சூழல் நிலவுவதால் உணவுக்காகவும் , தண்ணீருக்காகவும் பூண்டி வெள்கியங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு ஒற்றை யானை வந்தது.
தண்ணீர் டேங்கை கவிழ்த்து தண்ணீர் குடிப்பதும் , குப்பை தொட்டியில் கிடக்கும் உணவை உண்ணும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த ஒற்றை யானையின் தேவையை உணர்ந்து அதற்கான உணவும் நீரும் வனத்துக்குள் கிடைக்கும் வகையில் நீர் தொட்டிகளையும் உணவு கிடைக்க வழிவகையும் செய்ய கோரிக்கை எழுந்து உள்ளது.
கோவிலுக்கு அடிக்கடி விசிட் வரும் காட்டுயானை...தண்ணீர் தேடி அலையும் வீடியோ வைரல்#Coimbatore#elephantpic.twitter.com/RbNQMfHkz8
— Indian Express Tamil (@IeTamil) April 9, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.