அரசு அடுக்குமாடி குடியிருப்பில் பராமரிப்பு பணிகள் செய்யாமல் பணம் வசூலிப்பதாக புகார்; ஆட்சியரிடம் மனு

கோவையில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் முறைகேடுகள் நடப்பதாக கூறி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து உள்ளனர்.

கோவையில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் முறைகேடுகள் நடப்பதாக கூறி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து உள்ளனர்.

author-image
WebDesk
New Update
covai complaint

கோவை அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் புகார்

அரசு அடுக்குமாடி குடியிருப்பில் பராமரிப்பு பணிகள் செய்யாமல் பணம் வசூலிப்பதாகவும் கேள்வி கேட்கும் நபர்களின் வீடுகளுக்கு சீல் வைப்பதாக மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் புகார் அளித்தனர்.

Advertisment

கோவை கோவைப்புதூர் அருகே உள்ள மலைநகர் பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் முறைகேடுகள் நடப்பதாக கூறி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து உள்ளனர்.

குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கு பராமரிப்பு பணிகள் செய்யாமல், பராமரிப்பு கட்டணம் வசூலிப்பதாக மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் பராமரிப்பு பணிகள் செய்யாதது குறித்து கேட்டால், வீடுகளுக்கு சீல் வைத்து விடுவதாக மிரட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Advertisment
Advertisements

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கு எந்த வித பராமரிப்பு பணிகளும் செய்யப்படவில்லை. ஆனால், பராமரிப்பு கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து கேட்டால், வீடுகளுக்கு சீல் வைத்து விடுவதாக மிரட்டுகிறார்கள்.

எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

covai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: