காதலர் தினத்தை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் இருந்து ரோஜாப்பூக்கள் வெளிநாடுகளுக்கு விமானத்தில் அனுப்பப்படுகிறது.
கோவை பூ மார்க்கெட்டில் இருந்து வெளிநாடுகளுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூ விற்பனை சூடு பிடித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/02/13/KYEcE1Z8b8Hz4hOyEghb.jpg)
காதலர்கள் தங்களுடைய காதலை பரிசுப் பொருட்கள் மற்றும் பூக்கள் கொடுத்து சொல்லுவது வழக்கமாக வைத்துள்ளனர் அதில் ரோஜா பூக்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் பூ மார்க்கெட்டில் ரோஜா பூவின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
குறிப்பாக துபாய் சார்ஜா மஸ்கட் உள்ளிட்ட நாடுகளுக்கு கடந்த ஒரு வாரமாக ரோஜா பூக்கள் ஏற்றுமதி செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/02/13/PoOCfcMYhLP3OtXTtdV2.jpg)
அதுமட்டுமில்லாமல் ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் ரோஜா பூக்கள் அதிகளவில் அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
ஒரு ரோஜாவின் விலை 50 ரூபாயிலிருந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூடுதலாக அளவேற்றுவது போன்ற பூக்களுக்கு ஏற்றவாறு விற்பனை விலை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2025/02/13/4f5hI71634wojnDciVvv.jpg)
ஏற்றுமதி மட்டுமில்லாமல் இங்கேயும் பூக்களின் விற்பனை அதிகரித்துள்ளது இளம் பெண்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் பூக்களை வாங்கி செல்வது குறிப்பிடத்தக்கது என கடையின் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்