மேம்பாலத்தில் தேங்கிய மழை நீர் : தெப்பக்குளம் போல் மாறிய பாலம் - நெட்டிசன்கள் கிண்டல்..!

கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மேம்பாலத்தில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கோவை மழை

மேம்பாலத்தில் தேங்கிய மழைநீர்

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மேம்பாலத்தில் மழைநீர் தேங்கிய நிலையில் வாகன ஓட்டிகள் ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர்.

Advertisment

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பிற்பகலுக்கு மேல் மாலை வரை ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்தது. இதனை அடுத்து கோவையில் இருந்து உதகை செல்லும் பிரதான சாலை உள்ள பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மேம்பாலத்திற்கு மேல் மழை நீர் தேங்கி தெப்பக்குளம் போல் காட்சி அளிக்கிறது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும் மேம்பாலத்தில் மழை நீர் தேங்கியதால் பாலமா ? தொட்டிபாலமா ? என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றது. உடனடியாக பாலத்தில் இருக்கும் குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

covai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: