வீட்டில் தயிர் மற்றும் சில பொருட்கள் இருந்தால் போதும், பார்ப்பதற்கு பளபளப்பான கூந்தல் மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.
தயிரில் உள்ள கொழுப்பு சத்து கூந்தலை மிரதுவாக்கி, வரண்ட முடியை கட்டுப்படுத்தும். இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் கூந்தலின் வேர் பகுதியை இது சுத்தம் செய்யும். முடியின் அடிப்பகுதியில் உள்ள துளைகளை சுத்தம் செய்யும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும். கூந்தலின் வேர்களை சுற்றி உள்ள சிறு துளைகளை நாம் ’follicle’ என்று அழைப்போம். தயிர் இதை வளர உதவும். கூந்தலின் வலுவை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
தயிர்- முல்தானி மெட்டி
அரை கப் தயிரில், தேவையான முல்தானி மெட்டியை கலந்து கூந்தல் மற்றும் வேர்களில் போடவும். இதை 20 முதல் 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். சாதாரண தண்ணீரில் கூந்தலை கழுவ வேண்டும்.
தயிர்- தேன்
அரை கப் தயிரில், 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து இதை கூந்தலில் போடவும். 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து இதை நாம் கழுவ வேண்டும். நாம் பயன்படுத்தும் ஷாம்பூவை வைத்து தலையை கழுவலாம்.
தயிர்- வெந்தயம்
வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்து பேஸ்டாக அரைக்கவும். இதை தயிரில் சேர்த்து கலந்து கூந்தல் மற்றும் கூந்தல் வேர்கள் வரை போடவும். 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
தயிர்- தேங்காய் எண்ணெய்
தயிரில், தேவையான அளவில் தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் போடவும். ஒரு மணி நேரம் கழித்து தலையை கழுவ வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“