3ம் தேதி உருவாகும் புயல்: எங்கெல்லாம் மழை ?... பாலச்சந்திரன் பேட்டி

வங்கக்கடலில் நிலவும் ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் நிலவும் ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
sada

வங்கக்கடலில் நிலவும் ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisment

 வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது “  வங்கக்கடலில் நிலவும் ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். வரும் 3ம் தேதி பூயல் உருவாகும். இந்த புயல் வட தமிழகம் ஆந்திரா இடையே கரையை கடக்கலாம்.

59 இடங்களில் கனமழையும், 16 இடங்களில் மிக கனமழையும் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம்  ஆவடியில் 19 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அடுத்து வரும் 4 நாட்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெயக்கூடும். கனமழை பொருத்தவரையில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 2 , 3, 4 தேதிகளில் வடகடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 2ம் தேதி டெல்டா மாவட்டங்கள், 3, 4 தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

மீனவர்கள் எச்சரிக்கை

Advertisment
Advertisements

இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மிட்டர் வேகத்தில் வீசும். டிசம்பர் 1ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் அதையோட்டி உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 45 முதல் 50 கி.மீ வேகத்திலும் வீசும். டிசம்பர் 2ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்றானது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், 3ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும், வடதமிழகம், தெற்கு ஆந்திர பகுதிகளில் 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், 4ம் தேதி வடதமிழகம், தெற்கு ஆந்திரா கடற்கரையொட்டி உள்ள பகுதிகளில் 60 முதல் 70 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: