/tamil-ie/media/media_files/uploads/2020/01/Alwa.jpg)
பேரீச்சம் பழம், கடலைப் பருப்பு சேர்த்து அல்வா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பேரீச்சம் பழம் – 250 கிராம்
கடலைப் பருப்பு – முக்கால் கப்
நெய் – அரை கப்
பாதாம் – 8
சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
பால் – இரண்டரை கப்
செய்முறை
கடலைப் பருப்பை முக்கால் மணி நேரம் ஊறவைத்து, வடித்து அடிகனமான கடாயில் 2 கப் பால் சேர்த்து வேகவைத்து அரைக்கவும். பேரீச்சையை அரை கப் சூடான பாலில் ஊறவைத்து அதே பாலுடன் விழுதாக அரைக்கவும். அரை கப்
நெய்யை கடாயில் விட்டு பாதாம் பருப்பை பொன்னிறமாக வறுத்து, அதில் பருப்புக் கலவை, பேரீச்சைக் கலவையைச் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் நன்றாகக் கிளறவும்.
பிறகு அதில் சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து சர்க்கரை கரைந்ததும் இறக்கவும். சுவையான பேரீச்சை, கடலைப் பருப்பு அல்வா தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us