சர்க்கரையை குறைத்து பக்கவிளைவுகளையும் சரி செய்யும்… சுடு நீரில் அரை ஸ்பூன் இதை சேர்த்து சாப்பிடுங்க; டாக்டர் நித்யா

நீரிழிவு நோயினால் உடலில் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை மூலிகைகளால் தடுக்க முடியும். எளிய முறையில் சர்க்கரை அளவை குறைப்பதற்கான வழிமுறைகள் பற்றி விளக்குகிறார் மருத்துவர் நித்யா.

நீரிழிவு நோயினால் உடலில் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை மூலிகைகளால் தடுக்க முடியும். எளிய முறையில் சர்க்கரை அளவை குறைப்பதற்கான வழிமுறைகள் பற்றி விளக்குகிறார் மருத்துவர் நித்யா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Diabetes care tips

நீண்ட நாட்களாக சர்க்கரை அளவு அதிகரித்துக் கொண்டே இருந்தால், உடல் தேகத்திற்கு ஏற்றவாறு மருத்துவ குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும். எளிய முறையில் சர்க்கரை அளவை குறைப்பதற்கான வழிமுறைகள் பற்றி விளக்குகிறார் மருத்துவர் நித்யா. நீரிழிவு நோயினால் உடலில் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை மூலிகைகளால் தடுக்க முடியும். சர்க்கரை நோய் உள்ள ஆண்களுக்கு கை, கால் நடுக்கம், ஸ்டாமினா குறைவு, ஆண்மை குறைபாடு தொடர்பான பிரச்னை இருப்பதை காண முடியும்.

Advertisment

ஆண்மை குறைபாடு, விந்தணுக்கள் குறைபாடு, ஸ்டாமினா குறைவு உள்ள ஆண்கள், சாப்பிடக் கூடிய அரிசி வகைகளில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். கருப்பு கவுனி, மாப்பிள்ளை சாம்பா அரிசி, கருடன் சம்பா அரிசி சாப்பிடலாம். சர்க்கரை நோய் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அன்றாட உணவில் கருடன் சம்பா அரிசியை சேர்த்துவர வேண்டும். இதனால், ரத்தத்தில் இருக்கக் கூடிய சர்க்கரை அளவை குறைகிறது. இதனுடன், மாப்பிளை சம்பா அரிசி, மூங்கில் அரிசி அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடும்போது உடல் வலிமை அடைகிறது என்கிறார் மருத்துவர் நித்யா.

சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது கண்களில் இருக்கக்கூடிய நரம்புகள் தொடர்பான பிரச்னை ஏற்படுகிறது. மெல்லிய நரம்புகள் பலவீனமாகக் கூடும். அதற்கான சிகிச்சை முறைகளையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இதற்கு சித்த மருத்துவத்தில் நேத்திர தைலம் உள்ளது. இரவு உறங்கும்போது நேத்திர தைலத்தை கண் படலங்கள் சுற்றி தடவ வேண்டும். இதனால், சர்க்கரை நோயால் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், விரைந்து குணமாக அதிக வாய்ப்புள்ளது என்கிறார் மருத்துவர் நித்யா.

உணவு முறைகளில் நார் சத்து இருக்கக்கூடிய உணவுகளை எடுக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் நேரம் தவறாமல் சாப்பிட வேண்டியது அவசியம். இதனால், விரைவில் ஜீரணமாகி ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.

Advertisment
Advertisements

ரத்தத்தில் சர்க்கரை அளவை எப்படி குறைப்பது?

தான்றிக்காய், சீந்தில், பிஞ்சு கடுக்காய், கொன்றை மரப்பட்டை, நாவல் பட்டை ஆகிய ஐந்தையும் எடுத்து, அதனுடன் வெள்ளை கரிசாலை சாறு, கீழாநெல்லி சாறு சேர்த்து வெயிலில் உளர்த்தி எடுக்க வேண்டும். பிறகு இதனை எடுத்து மிக்சியில் நன்றாக அரைத்து பவுடர்போல எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை ஒரு அரைஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் போட்டு மிக்ஸ் பண்ணி குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், உடலில் இருக்கக்கூடிய சர்க்கரை அளவு குறையும். ஆண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகள் தீர இந்த சூரணத்தை பயன்படுத்தலாம். ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து வெந்நீரில் கலந்து காலை இரவு 2 வேளையும் உணவுக்கு முன் சாப்பிடலாம் என்கிறார் மருத்துவர் நித்யா.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Diabetes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: