வெந்தயம் ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் காணப்படும் ஒரு அதிசய மூலிகையாகும். அதிலும் வெந்தய கீரை, இந்தியாவில் ஏராளமாக கிடைக்கின்றன, இந்த ருசியான கீரையில் செய்யப்பட்ட சுவையான உணவுகளை மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
Advertisment
ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின், தாமிரம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், வைட்டமின் ஏ, பி6, சி, கே போன்ற பல ஊட்டச்சத்துக்களின் மூலமாக, பல நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, சக்திவாய்ந்த உணவு, பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்படுகிறது.
இன்சுலினைச் சார்ந்து இல்லாத நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் வெந்தயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கையின்படி, 25-100 கிராம் வெந்தய விதைகளை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
உடலில் குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை மேம்படுத்த வெந்தயம் உதவுகிறது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் செரிமானம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை மெதுவாக உறிஞ்சுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
வெந்தயம் இரத்த குளுக்கோஸைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை உறிஞ்சுதல் வீதத்தை குறைப்பதன் மூலம் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
வெந்தய விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளது, இது குடலுக்குள் சர்க்கரையை உறிஞ்சுவதை தாமதப்படுத்துவதன் மூலம் உணவுக்குப் பின் இரத்த சர்க்கரை அளவை மாற்றியமைக்கிறது. அவற்றில் 4-ஹைட்ராக்ஸிஸ்லூசின் எனப்படும் அமினோஅல்கனோயிக் அமிலம் உள்ளது, இது நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
இரத்தச் சர்க்கரையைக் குறைப்பதைத் தவிர, வெந்தயம் கொழுப்பைக் குறைக்க உதவும் சபோனின்களின் சிறந்த மூலமாகும்.
இதை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள பல வழிகள் உள்ளன, வெந்தயத்தை இரவே ஊறவைத்து காலையில் குடித்து வரலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“