உங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 370 mg/dL அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால், அது ஒரு "எச்சரிக்கை அறிகுறி" என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இதற்கு உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படலாம்.
"இத்தகைய உயர் அளவுகள் உங்கள் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். இது உயிருக்கு ஆபத்தானது. மேலும், குழப்பம், சோர்வு மற்றும் குமட்டல் போன்ற உணர்வுகள் இருந்தால், பக்கவாதம், டயாபட்டீஸ் கீட்டோஅசிடோசிஸ் (DKA) போன்ற சிக்கல்களுக்கு இது வழிவகுக்கும்," என்று டாக்டர் ஸ்வரூப் ஸ்வராஜ் பால் கூறினார். (senior consultant cardiovascular and thoracic surgeon, Gleneagles Hospitals Parel)
உயர் ரத்த சர்க்கரை அளவுகள் ஆபத்தானவை, ஏனெனில் அவை காலப்போக்கில் உங்கள் கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் இதயத்தை சேதப்படுத்தும். (lead consultant, internal medicine, CK Birla Hospital, Delhi) டாக்டர் நரேந்தர் சிங்லா கூறுகையில், 250 mg/dL-க்கு அதிகமான அளவுகள் அவசரகால மருத்துவ கவனிப்பு தேவைப்படும் ஹைப்பர் கிளைசீமியாவிற்கு வழிவகுக்கும், அதே நேரத்தில் 300 mg/dL-க்கு அதிகமான அளவுகள் நீரிழிவு கீட்டோஅசிடோசிஸுக்கு வழிவகுக்கும் - இது உயிருக்கு ஆபத்தான நிலை.
இதய நோயாளிகளுக்கு, உயர் ரத்த சர்க்கரை அளவு ரத்த நாளங்களில் ஆரம்பத்திலேயே அடைப்புகளை ஏற்படுத்தி, முன்கூட்டிய மாரடைப்புக்கு வழிவகுக்கும் என்று டாக்டர் பால் மேலும் கூறினார்.
உயர் ரத்த சர்க்கரை அளவுகள் பல்வேறு காரணிகளால் ஏற்படலாம்
அதிகப்படியான மன அழுத்தம், மருந்துகளைத் தவறவிடுதல், தொற்று அல்லது மோசமான உணவுத் தேர்வுகள் ஆகியவை இதில் அடங்கும். சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மருந்துகள் உதவக்கூடும் என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் நீண்ட கால கட்டுப்பாடு என்பது ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மற்றும் சிறந்த வாழ்க்கை முறையை சார்ந்துள்ளது. ஆரோக்கியமான மற்றும் நன்கு சமச்சீரான உணவை உட்கொள்வது, தினமும் நடப்பது, நன்றாக தூங்குவது மற்றும் உங்கள் மன அழுத்த அளவைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துங்கள், என்று டாக்டர் பால் அறிவுறுத்துகிறார்.
அவசர காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி இங்கே:
/indian-express-tamil/media/media_files/2024/10/28/iWJ7xv2c6W9qIkq501nZ.jpg)
நன்கு நீரேற்றத்துடன் இருங்கள், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீர் மூலம் அதிகப்படியான குளுக்கோஸை வெளியேற்ற உதவுகிறது.
யுரின் கீட்டோன் பரிசோதனையைப் பயன்படுத்தி கீட்டோன்களைக் கண்காணிப்பது முக்கியம். கீட்டோன்களின் இருப்பு டயாபட்டீஸ் கீட்டோஅசிடோசிஸ் வருவதைக் குறிக்கலாம், மேலும் கண்டறியப்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
உணவுத் திட்டத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் நீரிழிவு மருந்து உட்கொள்ளும் வழக்கத்தில் இருந்தால், மருந்தின் அளவு அல்லது மருந்து வகையை மாற்றுவது அவசியமா என்பது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள் என்று டாக்டர் சிங்லா குறிப்பிட்டார்.
நீங்கள் இன்சுலின் பயன்படுத்துபவராக இருந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது அவர்களின் அவசரகால ஆலோசனையைப் பின்பற்றுங்கள். நீரேற்றத்துடன் இருங்கள். போதுமான தண்ணீர் குடியுங்கள், ஆனால் சர்க்கரை பானங்கள் உட்கொள்வதைக் குறைக்கவும். அவசரகால மருத்துவரைப் பார்த்த பிறகு மற்றும் நிலைமை கட்டுக்குள் வந்தவுடன், உங்கள் சிகிச்சைத் திட்டத்தை சரிசெய்வது குறித்து உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள் என்று டாக்டர் பால் கூறினார்.
கவனிக்க வேண்டியவை?
சிகிச்சைத் திட்டத்தைப் பின்பற்றியும் ரத்த சர்க்கரை அளவு 370 mg/dL-க்கு அதிகமாக இருந்தால், உடனடியாக சுகாதார நிபுணரிடம் பேசுவது அவசியம். அவர்கள் இன்சுலின் அல்லது மருந்தின் அளவை சரிசெய்ய வேண்டியிருக்கலாம், என்று டாக்டர் சிங்லா கூறினார்.
மேலும், அதிகப்படியான தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், மங்கலான பார்வை அல்லது கடுமையான வயிற்று வலி போன்ற அறிகுறிகளை ஒரு நபர் அனுபவித்தால், அவர்கள் தாமதிக்காமல் அவசரகால மருத்துவ கவனிப்பை நாட வேண்டும், ஏனெனில் இவை வளர்ந்து வரும் நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்," என்று டாக்டர் சிங்லா மேலும் கூறினார்.
ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், தவறாமல் மருத்துவரை அணுகவும், மருந்துகளை உட்கொள்ளவும் மற்றும் உங்கள் ரத்த சர்க்கரை அளவை தவறாமல் கண்காணிக்கவும்.
Read in English: Can be life-threatening’: Here’s what to do if your blood sugar is 370 mg/dL and higher