Advertisment

சுகர் ஏறவே ஏறாது; நீங்க சாப்பிடற டைம் இப்படி இருக்கட்டும்: டாக்டர் அகிலா மணி

சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் ஏறி இறங்கும் சர்க்கரை அளவை சீராகக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க டாக்டர் அகிலா மணி, சாப்பிடும் நேரத்தை பிரித்து மாற்றி அமைத்துக்கொண்டால் சுகர் ஏறவே ஏறாது என்று கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
diabetes dr agila mani

டாக்டர் அகிலா மணி, சர்க்கரை நோயாளிகள் அவர்கள் சாப்பிடும் தினசரி உணவு முறை மற்றும் சாப்பிடும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சர்க்கரை நோயாளிகள் எப்படியாவது ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சரியான நேரத்தில், சரியான உணவுகளை சாப்பிடாததால், சர்க்கரை அளவு சாப்பிடுவதற்கு முன்பு குறைவாகவும் சாப்பிட்ட பிறகு திடீரென அதிகரிக்கவும் செய்கிறது. இப்படி தீடீரென ஏறி இறங்கும் அதிக சர்க்கரை அளவால், இதய பாதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு, ஸ்ரோக், கால் பிரச்னை ஆகியவை ஏற்படுவது உண்டு. அதனால், சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.

Advertisment

இப்படி சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் ஏறி இறங்கும் சர்க்கரை அளவை சீராகக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க டாக்டர் அகிலா மணி, சாப்பிடும் நேரத்தை பிரித்து மாற்றி அமைத்துக்கொண்டால் சுகர் ஏறவே ஏறாது என்று கூறுகிறார்.

டாக்டர் அகிலா மணி யூடியூப் சேனலில் கூறுகையில், சர்க்கரை நோயாளிகள் அவர்கள் சாப்பிடும் தினசரி உணவு முறை மற்றும் சாப்பிடும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனக் கூறுகிறார். வழக்கம் போல, காலையில் நிறைய சாப்பாடு, மதியம் நிறைய சாப்பாடு, இரவு நிறைய சாப்பாடு, இடையில் டீ, காபி என்று இல்லாமல், சாப்பிடும் நேரத்தையும் உணவு முறையையும் அளவையும் மாற்ற வேண்டும் என்று கூறுகிறார். 

அதாவது, காலையில் எழுந்தவுடன் நீங்கள் வழக்கமாக சாப்பிடும் டீ அல்லது பால் 150 மி.லி, அடுத்து 8 அல்லது 8.30 மணிக்கு 2 இட்லி, முளைக்கட்டிய பயிறு, ஒரு முட்டை, காய்கள் எடுத்துக்கொள்ளுங்கள். கட்டாயம் காலையில் சாப்பிடும் நேரம் மாறக்கூடாது, காலையில் 8.30 மணிக்கு எல்லாம் காலை உணவை சாப்பிட வேண்டும். அது ஒரு ஹெல்தியான பிரேக்ஃபாஸ்ட்டாக இருக்க வேண்டும்.

Advertisment
Advertisement

அடுத்து, சர்க்கரை நோயாளிகள் 11 மணிக்கு சோர்வாக உணர்ந்தால், உங்களால் எதையுமே செய்ய முடியவில்லை என்றால், நீங்கள் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் நீர் மோர் எடுத்துக்கொள்ளுங்கள், மோரில் சியா சீட் ஊறவைத்துவிட்டு, அதை கலந்துவிட்டு எடுத்துச் சென்று குடிக்கலாம். அப்படி குடிக்கும்போது, வயிறு நிரம்பிய உணர்வும் இருக்கும். சுகரும் ஏறாது என்று டாக்டர் அகிலா மணி கூறுகிறார். 

அதற்கு பிறகு, மதிய உணவாக, வேக வைக்காத காய்கறி சாலட் எடுத்துச் சென்று சாப்பிடலாம். அதனுடன் ஒரு முட்டை, காய்கறிகள் எடுத்துக்கொள்ளலாம், நீங்கள் சைவமாக இருந்தால் ஊறவைத்த 10 பாதம் எடுத்துக்கொள்ளுங்கள். 

வேலைக்கு செல்பவர்கள் மாலை ஸ்நாக்ஸ்க்கு செய்து எடுத்துக்கொண்டு போக முடியாது என்கிறபோது, பழங்களை துண்டுகளாக நறுக்காமல் எடுத்துச் செல்லுங்கள். ஒரு சிறிய ஆப்பிள், கொய்யா பழம், சிறிய அளவிலான வெள்ளரிக்காய் அப்படியே எடுத்துச் சென்று கழுவி சாப்பிடலாம். அதோடு சேர்த்து ஒரு டீ குடித்துக்கொள்ளலாம். 

மாலையில் இந்த ஸ்நாக்ஸ் ஏன் முக்கியமானது என்றால், வேலைக்கு செல்பவர்கள் சிலர் எதுவுமே சாப்பிடாமல் ரொம்ப பசியுடன் வீட்டுக்கு வருவார்கள். வந்த உடனே வீட்டில் உள்ள ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட வேண்டியிருக்கும். ஏனென்றால், அவர்களால் சமைக்கிற வரை தாங்க முடியாது. இப்படி சாப்பிடுவதால், அவர்களுக்கு சர்க்கரை அளவு திடீரென உயரும். ஒருவேளை நீங்கள் வீட்டில் இருக்கிறீர்கள் என்றால் ஏதாவது ஒரு சுண்டல் வகை ஒரு கப் எடுத்துக்கொள்ளலாம்.


அதே போல, இரவு 7.30 மணிக்கு இரவு உணவு சாப்பிட வேண்டும். அது சப்பாத்தி, பருப்பு என்று ஏதாவது அளவாக எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், இரவு உணவுக்கு பிறகு, சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக எதையும் சாப்பிடக் கூடாது என்று டாக்டர் அகிலா மணி கூறுகிறார்.

ஒரு வேளை உங்களுக்கு பசிக்கிற மாதிரி இருந்தால் தூங்க செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முனால், பால், புரோட்டின் பவுடர் எடுத்துக்கொள்ளலாம். 

இந்த மாதிரி சாப்பிடும் நேரத்தை பிரித்து அளவாக, ஆரோக்கியமாக சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென ஏற்ற இறக்கம் இருக்காது. HBA1C அளவும் சீராக இருக்கும் என்று டாக்டர் அகிலா மணி கூறுகிறார்.

அதாவது, சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் நேரத்தை இப்படி பிரித்துக்கொள்ளுங்கள்.

காலை உணவு: காலை 8:30 - 9:00 மணி
மதியம் சிற்றுண்டி: காலை 10:30 - 11:00 மணி
மதிய உணவு: பிற்பகல் 1:30 - 2:00 மணி
மாலை சிற்றுண்டி: பிற்பகல் 3:30 - 4:00 மணி
இரவு உணவு: மாலை 7:30 - 8:00 மணி

இப்படி நீங்கள் சாப்பிடும் நேரத்தை பிரித்துக்கொண்டு ஆரோக்கியமான உணவை அளவாக சாப்பிட்டால் சுகர் ஏறவே ஏறாது என்று டாக்டர் அகிலா மணி கூறுகிறார். 

Diabetes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment