/indian-express-tamil/media/media_files/2025/10/10/download-12-2025-10-10-12-03-15.jpg)
பல ஆண்டுகளாக, சர்க்கரை நிறைந்த குளிர்பானங்களுக்கு மாற்றாக, "ஆரோக்கியமான" தேர்வாக டயட் சோடா பரிந்துரைக்கப்படுகிறது. "பூஜ்ஜிய கலோரி" பானமாக விளம்பரப்படுத்தப்படும் இது, குற்ற உணர்வில்லாமல் பருகக்கூடியது என்ற எண்ணம் பலரிடமும் நிலவி வருகிறது. ஆனால், சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய ஆய்வு, இந்த நம்பிக்கையை முற்றிலும் மாற்றி அமைக்கிறது.
சூச்சோ பல்கலைக்கழக மருத்துவமனையின் ஆராய்ச்சியில், தினமும் ஒரு கேன் (250 மில்லி) செயற்கை இனிப்பு கொண்ட சோடா குடிப்பவர்களுக்கு, MASLD எனப்படும் வளர்சிதை மாற்ற செயலிழப்புடன் கூடிய கல்லீரல் நோய் ஏற்படும் அபாயம் 60% அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது மிகவும் அதிர்ச்சிகரமான முடிவு என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஸ்டீடோடிக் கல்லீரல் நோய் என்றால் என்ன?
வளர்சிதை மாற்ற செயலிழப்பு-தொடர்புடைய ஸ்டீடோடிக் கல்லீரல் நோய் என்பது, கல்லீரலில் கொழுப்பு சேர்வதற்கும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கும் இடையே உள்ள தொடர்பை உணர்த்தும் ஒரு புதிய வகை நச்சு கல்லீரல் நோய். இது அமெரிக்காவில் மட்டும் தற்போது 38% பெரியவர்களை பாதிக்கிறது, மேலும் 2040-க்குள் இந்த விகிதம் 55% ஐ அடையும் என கணிக்கப்படுகிறது.
ஆய்வில் என்ன தெரிய வந்தது?
- 123,800 UK குடியிருப்பாளர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வில் பங்கேற்றனர்.
- தினமும் ஒரு கேன் டயட் சோடா குடித்தவர்கள், வளர்சிதை மாற்ற செயலிழப்பு-தொடர்புடைய ஸ்டீடோடிக் கல்லீரல் நோய் ஏற்படும் அபாயத்தில் 60% உயர்வு கண்டனர்.
- அதே அளவு சர்க்கரை சோடா குடித்தவர்கள் 50% அதிக ஆபத்தில் இருந்தனர்.
- முக்கியமாக, டயட் சோடா மட்டும் தான் கல்லீரல் தொடர்பான இறப்பு அபாயத்துடன் நேரடி தொடர்பு கொண்டிருந்தது.
இனிப்பின் பின்னால் மறைந்த ஆபத்து
சர்க்கரை இல்லாத பானங்கள் கூட குடல் நுண்ணுயிரிகளை பாதித்து, வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. செயற்கை இனிப்புகள், இன்சுலின் பதிலை தூண்டி, உணவுக்கான பசியை அதிகரிக்கவும் காரணமாகின்றன. இரண்டுவிதமான பானங்களும் கல்லீரலில் கொழுப்பு சேர்வதை ஊக்குவிக்கும், ஆனால் டயட் சோடா மட்டும் தான் கல்லீரல் இறப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.
தண்ணீர் தான் தீர்வு!
இந்த ஆய்வின் மற்றொரு முக்கியமான தகவல்:
- டயட் சோடாவிற்கு பதிலாக தண்ணீர் குடிப்பவர்கள், இந்த நோயின் அபாயத்தை 15% வரை குறைத்தனர்.
- சர்க்கரை சோடாவிற்கு பதிலாக தண்ணீர் குடித்தவர்கள், 13% ஆபத்தை குறைத்தனர்.
- அதாவது, தண்ணீர் என்பதைவிட பாதுகாப்பான பானம் எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது.
சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்புகள் இரண்டும் சீரான அளவுக்கு கூட உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதுதான் பாதுகாப்பான தீர்வு. மேலும், "லோ கலோரி" பானங்கள் என நினைக்கப்படும் டயட் சோடாவும், பாதுகாப்பற்றது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மாற்றாக என்ன குடிக்கலாம்?
நிபுணர்கள் பரிந்துரைக்கும் பாதுகாப்பான மாற்றுகள்:
- மூலிகை தேநீர்
- ஸ்பார்க்லிங் வாட்டர்
- லெமன் வாட்டர்
- நெச்சுரல் இனிப்பு கலந்த சுறுநீர் பானங்கள்
இவை மட்டுமல்லாமல், நாள் முழுவதும் போதுமான தண்ணீர் குடிக்கும் பழக்கம், கல்லீரல் மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
இந்த ஆய்வு ஒரு முக்கியமான உண்மையை வெளிக்கொண்டு வருகிறது – விளம்பரங்களில் சொல்வது போல அல்ல உங்கள் உடல் உணர்வுகள். "பூஜ்ஜிய கலோரி" என்ற பெயரில், உண்மையான விளைவுகளை மறைக்கும் பானங்கள், உங்கள் உடலின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடும். எனவே, இனி உங்கள் பானத் தேர்வுகள் குறித்து சிந்தியுங்கள். ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு, தண்ணீர் தான் உண்மையான நண்பன் என்பதை நினைவில் வையுங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.