புது விதமாக காளான் குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
காளான் – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 2
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
மசாலா அரைக்க
தேங்காய் – 1 கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
பட்டை – 1 இன்ச் துண்டு
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய், கறிவேப்பிலை, சோம்பு, பட்டை முதலியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு
சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும். பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு காளானை சேர்த்து பிரட்டி, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். அவ்வளவு தான் சுவையான புது வித காளான் குழம்பு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“