/indian-express-tamil/media/media_files/2024/12/23/tJcxAuK97CJNjaAxHgEo.jpg)
தினமும் காபி, டீ குடிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அதற்கு பதிலாக தேநீரில் ஒரு சிறிய மாற்றம் செய்து பருகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், ஒரு நாள் சாதாரணமாக தேநீர் பருகி கொள்ளலாம்.
ஒரு நாள் நெல்லிக்காயை கசாயமாக போட்டு, அதில் தேன் கலந்து குடிக்கலாம். குறிப்பாக, நெல்லிக்காய் பொடியை ஒரு ஸ்பூன் போட்டு, அத்துடன் ஒரு கிளாஸ் தண்ணீரை இளஞ்சூடாக கொதிக்க வைத்து தேன் கலந்து குடிக்கலாம். இந்த நெல்லிக்காயின் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றலை வயதான பின்பும் கூட மீட்டெடுக்க முடியும்.
இதேபோல், ஒரு நாள் ஆவாரை தேநீர் குடிக்கலாம். வறண்ட நிலப்பரப்பில் எங்கு பார்த்தாலும் ஆவாரை கிடைக்கும். இவற்றை தேர்ந்தெடுத்து உண்பதற்கு நாம் சற்று மெனக்கெட வேண்டும் என சிவராமன் தெரிவித்துள்ளார். ஒரு நாள் வெந்நீரில் எலுமிச்சை, இஞ்சி சாறு கலந்து குடிக்கலாம்.
மேலும், தேநீரை குடிக்கும் முறையும் பிரத்தியேகமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, வெறும் தேயிலையை கொதிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் போட்டு, அதனை சிறிது நேரம் முடி வைத்து குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதை தான் தேநீர் எனக் கூறுவார்கள்.
உலகிலேயே தேநீரில் பால் சேர்த்து குடிப்பவர்கள் இந்தியர்கள் தான் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். தேநீரின் பெரும்பாலான சத்துகள் பால் சேர்ப்பதால் நம் உடலுக்கு கிடைப்பதில்லை.
எனவே, பிளாக் டீ, கிரீன் டீ ஆகியவற்றையும் தேநீராக குடிக்க வேண்டும் என மருத்துவர் சிவராமன் பரிந்துரைத்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.