முடி உதிர்தல் என்பது இந்த நாட்களில் நம்மில் பலர் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினையாகும். முடி உதிர்வதைத் தடுக்கவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், உச்சந்தலையை மென்மையாக்குவதற்கும் ஒருவரின் தலைமுடிக்கு எண்ணெய் தடவுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Advertisment
உண்மையில், உலர்ந்த மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள சருமத்தை எவ்வாறு கவனித்துக்கொள்வீர்களோ, அதேபோன்று உங்கள் உச்சந்தலையிலும் எண்ணெய் தடவ வேண்டும். ஆனால் எண்ணெய்களை வாங்குவதற்குப் பதிலாக, சுத்தமான தேங்காய் எண்ணெயில் சில ஆரோக்கியமான பொருட்களைக் கலந்து, அனைத்து நன்மைகளையும் பெறலாம்.
இந்த இயற்கையான பொருட்கள் கூந்தலுக்கு ஊட்டமளித்து, பளபளப்பாகவும், துள்ளும் தன்மையுடனும் வைத்திருக்கும்.
உங்கள் தலைமுடியை அழகாக மாற்ற, நீங்களே சொந்தமாக உங்கள் வீட்டில் தயாரிக்கக் கூடிய ஹேர் ஆயில் இதோ!
கற்றாழை ஹேர் ஆயில் எப்படி செய்வது?
கற்றாழையில் முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லையைத் தடுப்பது மற்றும் வறண்ட உச்சந்தலைக்கு சிகிச்சையளிப்பது உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளன. இது உங்கள் தலைமுடிக்கு வலிமை மற்றும் ஊட்டச்சத்தை சேர்க்கிறது மற்றும் உங்கள் உச்சந்தலை மற்றும் முடியின் pH சமநிலையை மீட்டெடுக்கிறது.
செய்முறை
ஒரு முழு கற்றாழை இலையை எடுத்து இரண்டு பகுதிகளாக வெட்டவும். அதை நன்கு கழுவி, 20 நிமிடங்கள் தண்ணீரில் வைக்கவும். பிறகு கற்றாழையை எடுத்து, ஒரு துணி கொண்டு உலர்த்தவும்.
ஒப்போது இலைகளில் உள்ள ஜெல் அனைத்தையும் வெளியே எடுக்கவும்.
½ கப் இந்த ஜெல்லை எடுத்து ½ கப் தேங்காய் எண்ணெயுடன் கலக்கவும் (கலவை 50-50 ஆக இருக்க வேண்டும்).
அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து சூடானதும், மிதமான தீயில் 5-7 நிமிடங்கள் சூடாக்கி, முழுமையாக குளிர்விக்க அனுமதிக்கவும்.
இந்த குளிர்ந்த கலவையில் 5 சொட்டு ரோஸ்மேரி எஸன்ஷியல் எண்ணெயைச் சேர்க்கவும்.
இந்த எண்ணெயைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன், 2 வாரங்களுக்கு குளிர்ந்த இடத்தில் மற்றும் ஒரு பாட்டிலில் சேமிக்கவும்.
குறிப்பு: உங்கள் உச்சந்தலை இயற்கையாகவே எண்ணெய் பசை இருந்தால்’ முடிக்கு மட்டுமே எண்ணெய் தடவவும், உச்சந்தலையைத் தவிர்க்கவும். இந்த வழியில் உங்கள் தலைமுடி மென்மையாகவும், உச்சந்தலையில் பிசுபிசுப்பு இல்லாமல் ஈரப்பதமாகவும் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“